நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இலங்கையில் பயணக் கட்டுப்பாடு ஜூன் 7 வரை நீட்டிப்பு 

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மே 21-ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 

News image
இலங்கையில் பயணக் கட்டுப்பாடு ஜூன் 7 வரை நீட்டிப்பு 
Updated On :27 ஜனவரி 2024, 8:18 pm

IANS

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மே 21-ஆம் தேதி வரை விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு, தற்போது ஜூன் 7 வரை நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளனர். 

தொற்று காரணமாக இலங்கையில் பயணக் கட்டுப்பாடு முன்னதாக மே 28 வரை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, 

ஜூன் 7 வரை கட்டுப்பாடுகள் தொடரும். ஆனால் மே 25, மே 31 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் தளர்த்தப்படும் என்றும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் தங்கள் அருகிலுள்ள கடைகளுக்குச் சென்று அத்தியாவசிய பொருள்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வாகனங்களில் பயணம் செய்ய யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், வீடுகளை விட்டு வெளியேறுபவர்கள் பொருள்களை விரைந்து வாங்கிக்கொண்டு உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதேசமயம் மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் தொடரும் என்று அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.