நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வங்க தேசத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் நபர் பாதிப்பு

வங்க தேசத்தின் சட்கிராவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
வங்க தேசத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் நபர் பாதிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 8:18 pm

IANS

வங்க தேசத்தின் சட்கிராவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பிர்தம் பொது மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்ட்ட நபர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டது, என்று மருத்துவமனை இயக்குனர் ஜெனரல் எம்.கே.ஐ குய்யம் சௌத்ரி தெரிவித்தார்.

மியூகோமிகோசிஸ் என்பது ஒரு பூஞ்சை தொற்று ஆகும், இது அரிதானது ஆனால் ஆபத்தானது. 50 சதவீத வழக்குகளில், இந்த பூஞ்சை தொற்று மரணத்தை ஏற்படுத்துகிறது.

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட ஒருவர் கண்கள் அல்லது தாடையைச் சுற்றியுள்ள எலும்புகளை அகற்றுவதன் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் கருப்பு பூஞ்சை தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.