நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

போபாலில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் கரோனா கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1-ஆம் தேதி வரை அம்மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image
போபாலில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு 
Updated On :27 ஜனவரி 2024, 8:17 pm

IANS

மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் கரோனா கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1-ஆம் தேதி வரை அம்மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக முதல்முதலில் ஏப்ரல் 12 அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக மே 24 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவினாஷ் லவானியா பிறப்பித்த உத்தரவின்படி, 

போபால் மாநகராட்சி மற்றும் பெரேசியா நகரத்தின் கீழ் உள்ள பகுதிகளில் ஜூன் 1ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகள் மற்றும் அவசரக்கால பயணங்கள் கட்டுப்பாடுகளின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன என்றார்.

போபாலில் சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 1,16,481 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. மொத்தம் இதுவரை 895 இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.