நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி நிறுத்தம்: கேஜரிவால்

தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

News image
Delhi to get only 8 lakh jabs for June, vaccination for youth halted: Kejriwal
Updated On :27 ஜனவரி 2024, 8:17 pm

IANS

தில்லியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

அடுத்தகட்ட தடுப்பூசிகளைப் பெறும் வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தில்லி முதல் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், 18-44 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்குமாறு கோரியுள்ளதாகவும் கூறினார்.

மே மாதத்தில் 16 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தில்லிக்கு மாதத்திற்கு 80 லட்சம் கரோனா டோஸ் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது. 

ஜூன் மாதத்தில், 8 லட்சம் அளவு தடுப்பூசிகள் மட்டுமே கிடைக்க உள்ளது. தடுப்பூசி செலுத்தும் இயக்கம் இந்த வேகத்தில் நகர்ந்தால், தலைநகரில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.