நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

கோவாவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் தெரிவித்தார். 

News image
கோவாவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர்
Updated On :27 ஜனவரி 2024, 8:16 pm

IANS

கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் கோவாவில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, 

தொடர்ந்து மே 31 வரை ஊடரங்கு நீட்டிக்க உள்ளோம், மாநிலத்தில் உள்ள விதிமுறைகள் அவ்வாறே தொடரும். 

முன்னதாக ஊரடங்கு உத்தரவை மே 9 முதல் மே 23 வரை அறிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய பொருள்கள், மளிகைக் கடைகள், மதுபானக் கடைகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் பிற்பகல் 1  மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் மருத்துவக் கடைகள் மற்றும் உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.