டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கேதார்நாத் கோயில் நடை திறப்பு

கடுமையான கரோனா நெறிமுறைகளுக்கு மத்தியில் கேதார்நாத் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

News image

கேதார்நாத் கோயில் நடை திறப்பு 

Updated On :17 மே 2021, 12:59 pm

ருத்ரபிரயாக்: கடுமையான கரோனா நெறிமுறைகளுக்கு மத்தியில் கேதார்நாத் கோயில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோதிர்லிங்களில் ஒன்றான கேதார்நாத் கோயில் யாத்ரீகர்களுக்காக இன்று திறக்கப்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு கோயிலின் வாயில்கள் திறக்கப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டன. 

கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி கோயில்கள் மே 14-ஆம் தேதியன்று திறக்கப்பட்டன. 

"அனைவரையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பாபா கேதார்நாத்தை வேண்டிக்கொள்கிறேன்" என்று உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

உக்கிமத்தில் உள்ள ஓம்காரேஷ்வர் கோயிலுக்கு மாற்றப்பட்ட சிவன் சிலை மே 14 அன்று கேதார்நாத்தில் மீண்டும் நிறுவப்பட்டு மே 17-ஆம் தேதி இன்று அதிகாலை 5.00 மணி கோயில் நடை திறக்கப்பட்டது. 

குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி விட்டுச் செல்லுங்கள், முகக்கவசம் அணியுங்கள் என நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. 

குளிர்காலத்தையொட்டி கடந்தாண்டு நவம்பரில் கோயில் நடை சாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.