மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கங்கையில் மிதந்து வந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையதா? அச்சத்தில் பிகார்

பிகார் மாநிலம் பக்ஹர் மாவட்டத்தின் சௌஸா பகுதியில் பாய்ந்தோடி வரும் கங்கை நதியில் பல்வேறு நிலையில் மிதந்து வந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

News image

கங்கையில் மிதந்து வந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையதா? அச்சத்தில் பிகார்

Updated On :11 மே 2021, 7:07 am


பாட்னா: பிகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தின் சௌஸா பகுதியில் பாய்ந்தோடி வரும் கங்கை நதியில் பல்வேறு நிலையில் மிதந்து வந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

சௌஸா பகுதியில் கங்கை நதியில் 30-க்கும் மேற்பட்ட உடல்கள் கரையொதுங்கியிருந்தது குறித்து நகராட்சிக்கும் காவல்துறையினருக்கும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அழுகிய, பாதி எரிந்த நிலையில் என 12க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டு, புதைக்கும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் எரிக்க முடியாத நிலையில், எரிக்க போதிய இட வசதியோ, விறகுகளோ இல்லாமல், கரோனா நோயாளிகளின் உடல்கள் இவ்வாறு கங்கை நதியில் தூக்கி வீசப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இந்த உடல்கள் கரோனா நோயாளிகளுடையதா என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியில் சுமார் 40 முதல் 45 உடல்கள் மிதந்து வந்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள். ஆனால், மாவட்ட அதிகாரிகள் தரப்பில் 30 முதல் 35 உடல்கள் மிதந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உடல்கள் உத்தரப்பிரதேசத்தின் எந்த மாவட்டத்திலிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது புதிய விஷயமல்ல என்றும், கங்கையில் வீசப்பட்டு, இங்கே கரை ஒதுங்கும் பாதி எரிந்த நிலையிலான உடல்களை பறவைகள் கொத்தித் திண்பதும், நாய்கள் கடித்துச் சாப்பிடுவதும் வழக்கமானதுதான் என்றும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடல்களை எரிக்க கட்டைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால், பாதி எரிந்த நிலையிலும், பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட உடல்களும் கங்கையில் வீசப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.