டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்பு

அசாமின் 15-வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். 

News image

அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்பு

Updated On :10 மே 2021, 9:54 am


அசாமின் 15-வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று நண்பகல் 12 மணிக்கு பதவியேற்றார். 

மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா மற்றும் பிற தலைவர்கள் கலந்துகொண்டனர். 

ஹிமாந்தா பிஸ்வா சர்மா, சர்பானந்த சோனாவால் இருவருமே முதல்வர் பதவிக்குத் தகுதியானவர்கள் என்பதால், இருவரில் யாரை முதல்வராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தில்லியில் நேற்று பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தியது.

அதன்பின்னர் குவஹாத்தியில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமாந்தா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முன்னதாக முதல்வர் பதவியிலிருந்து சர்பானந்த சோனாவால் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அவர் அனுப்பி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து அசாம் மாநிலத்தின் புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். 

வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மீண்டும் தனது ஆட்சியைத் தக்கவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.