டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஹரியாணாவில் இன்று முதல் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஹரியாணாவில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

News image

ஹரியாணாவில் இன்று முதல் மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு

Updated On :10 மே 2021, 6:33 am

ஹரியாணாவில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இன்று முதல் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவிவரும் நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகின்றது. 

அந்தவகையில், ஹரியாணாவில் இன்று காலை 5 மணி முதல் மே 17-ஆம் தேதி காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில அரசு  உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. திருமணம், இறுதிச்சடங்கில் 11 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கரோனா கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஹரியாணா சுகாதார அமைச்சர் அனில் விஜி  தெரிவித்துள்ளார். 

முன்னதாக மே 3 முதல் மே 10 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கரோனா பரவலைத் தடுக்கும்வகையில் மேலும் ஒருவாரம்  பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 13,548 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. மேலும் 151 பேர் இறந்துள்ளனர். அதேசமயம் 12,639 பேர்  நோயிலிருந்து மீண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.