மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெங்களூரு இடுகாடுகளில் தொங்கும் ஹவுஸ்ஃபுல் பலகைகள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காத அவல நிலை நீடித்துக் கொண்டேயிருக்கிறது.

News image

ஹவுஸ்ஃபுல் பலகை தொங்குவதெல்லாம் தியேட்டர் அல்ல

Updated On :4 மே 2021, 5:43 am


பெங்களூரு: ஆக்சிஜன் பற்றாக்குறையால் சாமராஜ்நகா் மாவட்ட அரசு மருத்துவமனையில் 24 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்த சம்பவம் கா்நாடகத்தில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் கிடைக்காத அவல நிலையும் இன்னமும் நீடித்துக் கொண்டேயிருக்கிறது. படுக்கை வசதி கிடைத்தாலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பயமுறுத்துகிறது.

கர்நாடகத்தில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளில் போதிக ஆக்ஸிஜன் இல்லாத நிலை நேற்று ஏற்பட்டது. இதனால், நோயாளிகளை மருத்துவமனைகள் வெளியேற்றும் சூழ்நிலை உருவானது.  உடனடியாக அத்தனை நோயாளிகளுக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வதிக்கு எங்குச் செல்வது என்று தெரியாமல் நோயாளிகளின் உறவினர்கள் தவித்துப் போயினர்.

ஒரு பக்கம் மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்க மாவட்ட நிர்வாகங்கள் எடுத்த நடவடிக்கையும் திருப்தி அளிக்கவில்லை.

மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் அதே வேளையில், சுடுகாடுகளும் இடுகாடுகளும் தகனம் செய்யக் காத்திருக்கும் உடல்களால் நிரம்பியுள்ளன. சில இடுகாடுகளில் புதைக்க போதிய இடமில்லாமல், ஹவுஸ்புல் என்ற பலகை அதன் நுழைவு வாயில்களில் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பெரும்பாலும் திரையரங்குகளில்தான் ஹவுஸ்ஃபுல் பலகை வைப்பது வழக்கம். ஆனால், கரோனா பெருந்தொற்றால் இடுகாடுகளுக்கும், சுடுகாடுகளுக்கும் ஹவுஸ்ஃபுல் பலகை வைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டதே என்று மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.