பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியைச் சேர்ந்தவருக்கு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா பாதிப்பு 

நாட்டில் முதல் முறையாக தில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

தில்லியைச் சேர்ந்தவருக்கு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா பாதிப்பு

Updated On :17 மார்ச் 2021, 8:56 am

புது தில்லி: நாட்டில் முதல் முறையாக தில்லியைச் சேர்ந்த ஒருவருக்கு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்பு கரோனா பாதிப்புடன் இருந்த 33 வயது நபர் தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனி அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா, 33 வயது நபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தில்லியைச் சேர்ந்தவர். அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அறை முற்றிலும் வித்தியாசமானது என்றும், ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், தற்போதுதான் அவருக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்என்ஜேபி மருத்துவமனையில் ஏற்கனவே பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பாதித்த இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டு பிப்ரவரி இறுதி வரை அங்கு சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.