சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தெலங்கானாவில் 90 லட்சத்தைத் தாண்டியது கரோனா பரிசோதனை

தெலங்கானாவில் கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை 90 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image
தெலங்கானாவில் 90 லட்சத்தைத் தாண்டியது கரோனா பரிசோதனை
Updated On :27 ஜனவரி 2024, 7:41 pm

IANS

தெலங்கானாவில் கரோனா தொற்று தொடங்கியதிலிருந்து இதுவரை 90 லட்சம் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் 32,189 சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை நாட்டில் ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 90,16,741 ஆக உயர்ந்ததுள்ளது. 
 
அரசு ஆய்வகங்களில் சோதனைகள் நடத்தத் தொடங்கிக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. கடந்தாண்டு மே மாதம் தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தனியார் ஆய்வகங்களுக்குச் சோதனைகளை நடத்த அரசு அனுமதித்தது. 

தற்போது 20 அரசு மற்றும்60 தனியார் ஆய்வகங்களில் ஆர்டி-பிசிஆர்/சிபிஎன்ஏஏடி/ட்ரூநட் போன்ற சோதனைகளை நடத்தி வருகின்றன. அதேநேரத்தில் விரைவான ஆன்டிஜென் சோதனைக்கு 1076 மையங்கள் உள்ளன. 

இந்த ஆய்வகங்களில் நாளொன்றுக்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் சோதனைகள் செய்யப்படுகின்றன. சோதனைகளில் பெரும்பாலும் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் ஆகும். 

கடந்த 24 மணி நேரத்தில் 29,759 மாதிரிகள் அரசு ஆய்வகங்களிலும், மீதமுள்ள 2,430 தனியார் ஆய்வகங்களிலும் சோதனை செய்யப்பட்டன. 

மேலும், ஒரேநாளில் 142 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளன நிலையில், மொத்த பாதிப்பு 3,00,153 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்து 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,644 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 178 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 2,96,7,40 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.