/

தில்லியில் உணவு விநியோகிப்பாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள்: துணை முதல்வர்

தில்லியில் உணவு விநியோகிப்பாளர்களுக்கு 4 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்யும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

Updated On :30 ஜூன் 2021, 10:17 am

தில்லியில் உணவு விநியோகிப்பாளர்களுக்கு 4 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மணீஷ் சிசோடியா வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

உணவு விநியோகிக்கும் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது மிகவும் முக்கியமானது. அவர்கள் நாள்தோறும் உணவுகள் மற்றும் பிற பொருள்களை மக்களுக்கு விநியோகம் செய்கிறார்கள்.

அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தில்லியில் 4 சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தில்லியில் இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 17 லட்சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.