திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கரோனா மூன்றாம் அலை எப்படி இருக்கும்? ஐஐடி கான்பூர் ஆய்வு

கரோனா மூன்றாம் அலை நாட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

News image

கரோனா மூன்றாம் அலை எப்படி இருக்கும்? ஐஐடி கான்பூர் ஆய்வு

Updated On :21 ஜூன் 2021, 12:05 pm

புது தில்லி: கரோனா மூன்றாம் அலை நாட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூர் பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வெர்மா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கரோனா மூன்றாம் அலை என்பது, மக்களின் நடத்தை மற்றும் அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும். இரண்டாம் கரோனா அலை ஏற்பட்ட காலத்தில் கிடைத்திருக்கும் புள்ளி  விவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வில், கரோனா மூன்றாம் அலை மூன்று விதத்தில் அமையலாம். கரோனா மூன்றாம் அலையின் காரணமாக, நாடு முழுவதும் ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம்.

முதல் நிலை: (மீண்டும் பழையபடி மாறுவது) கரோனா மூன்றாம் அலை அக்டோபர் மாதம் உச்சமடைந்து, ஆனால், இரண்டாம் அலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

இரண்டாம் நிலை: (தீவிரமடைந்த தொற்றுடன் வழக்கமான நிலை) இந்த கரோனா அலை செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்டு, இரண்டாம் அலையைக் காட்டிலும் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். 

மூன்றாம் நிலை: (கடுமையான கட்டுப்பாடுகளுடன்) நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், கரோனா மூன்றாம் அலை தாமதமாக அக்டோபரில் தொடங்கும். இரண்டாம் அலையை விட பாதிப்புக் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறித்து ஐஐடி கான்பூர் குழுவினர் நடத்திய ஆய்வில், கரோனா இரண்டாம் அலை அனைத்து மாநிலங்களிலும் கடும் தீவிரத்தை அடையும், மிசோரம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.