அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கரோனா மூன்றாம் அலை எப்படி இருக்கும்? ஐஐடி கான்பூர் ஆய்வு

கரோனா மூன்றாம் அலை நாட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

News image
கரோனா மூன்றாம் அலை எப்படி இருக்கும்? ஐஐடி கான்பூர் ஆய்வு
Updated On :28 ஜனவரி 2024, 3:27 am

ANI

புது தில்லி: கரோனா மூன்றாம் அலை நாட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் ஏற்படும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

ஐஐடி கான்பூர் பேராசிரியர் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வெர்மா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

அதில் கரோனா மூன்றாம் அலை என்பது, மக்களின் நடத்தை மற்றும் அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அமையும். இரண்டாம் கரோனா அலை ஏற்பட்ட காலத்தில் கிடைத்திருக்கும் புள்ளி  விவரங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்திய ஆய்வில், கரோனா மூன்றாம் அலை மூன்று விதத்தில் அமையலாம். கரோனா மூன்றாம் அலையின் காரணமாக, நாடு முழுவதும் ஜூலை 15ஆம் தேதிக்குப் பிறகு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம்.

முதல் நிலை: (மீண்டும் பழையபடி மாறுவது) கரோனா மூன்றாம் அலை அக்டோபர் மாதம் உச்சமடைந்து, ஆனால், இரண்டாம் அலையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம்.

இரண்டாம் நிலை: (தீவிரமடைந்த தொற்றுடன் வழக்கமான நிலை) இந்த கரோனா அலை செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஏற்பட்டு, இரண்டாம் அலையைக் காட்டிலும் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். 

மூன்றாம் நிலை: (கடுமையான கட்டுப்பாடுகளுடன்) நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால், கரோனா மூன்றாம் அலை தாமதமாக அக்டோபரில் தொடங்கும். இரண்டாம் அலையை விட பாதிப்புக் குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நாட்டில் கரோனா இரண்டாம் அலை குறித்து ஐஐடி கான்பூர் குழுவினர் நடத்திய ஆய்வில், கரோனா இரண்டாம் அலை அனைத்து மாநிலங்களிலும் கடும் தீவிரத்தை அடையும், மிசோரம், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.