கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சாலை விபத்துகள் அமைதியான பெருந்தொற்று போன்றது: ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகளவில் நடக்கும் சாலை விபத்துகளில் 11 சதவீதம் இந்தியாவில் நடப்பவை என்று தெரிவித்துள்ளார்.

News image
சாலை விபத்துகள் அமைதியான பெருந்தொற்று போன்றது: ராஜ்நாத் சிங்
Updated On :28 ஜனவரி 2024, 3:23 am

ANI


புது தில்லி: நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்திருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உலகளவில் நடக்கும் சாலை விபத்துகளில் 11 சதவீதம் இந்தியாவில் நடப்பவை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகள், ஒரு அமைதியான பெருந்தொற்றுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

காணொலி வாயிலாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராஜ்நாத் சிங், நாட்டில் நிகழும் சாலை விபத்துகள் தற்போது கவலைதரும் வகையில் உள்ளன.

உலகில் உள்ள மொத்த வாகனங்களில் வெறும் 3 சதவீதத்துக்கும் குறைவான வாகனங்களே இந்தியாவில் இருக்கின்றன. ஆனால், உலகளவில் நடைபெறும் மொத்த சாலை விபத்துகளில் இந்தியாவில்தான் 11 சதவீத விபத்துகள் நிகழ்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 4.5 லட்சம் முதல் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. 1.5 லட்சம்  பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கிறார்கள். இது ஒரு அமைதியான பெருந்தொற்றுக்கு சற்றும் சளைத்ததல்ல என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.