ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மும்பையில் தொடரும் கனமழை: வெள்ளநீரை அகற்றும் பணிகள் தீவிரம்

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News image

மும்பையில் தொடரும் கனமழை: வெள்ளநீரை அகற்றும் பணிகள் தீவிரம்

Updated On :11 ஜூன் 2021, 10:06 am


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பையில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம்  சூழ்ந்துள்ளது. முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

மும்பை மக்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி தரும் வகையில், இன்று காலை முதல் மும்பையில் மழை நின்றுள்ளது.  ஆனால், தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மும்பை மேயர் கிஷோரி கூறுகையில், 458 பம்புகள் மூலம் சாலைகளிலிருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. சுமார் 73000 கழிவுநீர் வடிகால் மூடிகளை சரியாக பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.

மும்பையில் கழிவுநீர் வடிகால்வாய் மூடாமல் இருந்த நிலையில், அதில் இரண்டு பெண்கள் தவறி விழுந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கையில், ஃபைடர் மூடிகளைக் கொண்டு மூடப்பட்டிருந்ததால், அவை வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இனி, கழிவுநீர் வடிகால்வாய் மூடிகளை பூட்டும் வகையில் மூடியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் மழை காரணமாக, தண்டவாளங்களில் மழைநீர் சூழ்ந்து கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.