/

நம்பிக்கையூட்டும் தகவல்: கரோனாவை வென்ற 104 வயது மூதாட்டி

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி, கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.

News image

நம்பிக்கையூட்டும் தகவல்: கரோனாவை வென்ற 104 வயது மூதாட்டி

Updated On :11 ஜூன் 2021, 12:23 pm


கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி, கரோனா பாதித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளார்.

மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில், கரோனாவிலிருந்து 11 நாள்களில் மீண்டுள்ளார்.

கரோனா பாதித்த 104 வயது மூதாட்டி ஜானகி அம்மாளின் உடல்நிலை, மே 31-ஆம் தேதி மோசமடைந்தது. உடனடியாக அவர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக, 11 நாள்களில், பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். 

அவருடன் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மருமகளும், மருமகளின் தாயாரும் இன்னமும் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.