2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார்.

News image
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்து சந்திப்பு
Updated On :28 ஜனவரி 2024, 3:44 am

ANI

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் அமரீந்தர் சிங்கை கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தார்.

முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்து இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிலையில் முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்திற்கு மாநிலத்தின் அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சித்துவும் இந்த நிகழ்வில் பங்கேற்று, முதல்வருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்விற்கு பிறகு, மாநில காங்கிரஸ் தலைவராக சித்து பொறுப்பேற்கவுள்ள நிகழ்வில் முதல்வர் உள்பட அனைத்து எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்மூலம், சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வந்த உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.