2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்திய எல்லைக்குள் வெடிமருந்துடன் நுழைந்த டிரோன்: சுட்டு வீழ்த்தியது காவல்துறை

ஜம்முவில் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடிமருந்துடன் நுழைந்த டிரோனை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

News image
ஜம்முவில் வெடிமருந்துடன் டிரோன்(படம்: டிவிட்டர்)
Updated On :28 ஜனவரி 2024, 3:44 am

ANI

ஜம்முவில் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடிமருந்துடன் நுழைந்த டிரோனை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லைப் பகுதியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் கன்ஜக் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் டிரோன் பறந்துள்ளது. இதைக் கண்ட காவல்துறையினர் டிரோனை நோக்கி சுட்டதில், செயலிழந்து கீழே விழுந்தது. அந்த டிரோனிலிருந்து 5 கிலோ எடையுள்ள வெடிபொருளை கைப்பற்றினர்.

இதுகுறித்து ஜம்முவின் காவல்துறை துணைத் தலைவர் முகேஷ் சிங் கூறியதாவது,

இன்று அதிகாலை 1 மணியளவில் டிரோன் கண்டறியப்பட்டது. அந்த டிரோன் கீழ் நோக்கி தாக்குதல் நடத்த வரும்போது காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர். அதிலிருந்து வெடிக்க தயாராக இருந்த 5 கிலோ எடையுள்ள ஐஇடி வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டது. இதன்மூலம் பெரும் தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது என்றார்.

சுதந்திர தினத்தன்று தில்லியில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ள நிலையில், இந்த தாக்குதல் முயற்சியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் 27ஆம் தேதி, ஜம்முவில் சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே ஜம்மு மாவட்டத்தில் டிரான்கள் பறந்துவந்து இந்திய விமானப் படைத் தளத்தின் அலுவலகக் கட்டடத்தை சேதப்படுத்தின. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.