/

கேரளத்தில் ஜூலை 24, 25-ல் முழுப் பொதுமுடக்கம்

கேரள மாநிலத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

News image

கேரளத்தில் ஜூலை 24, 25-ல் முழுப் பொதுமுடக்கம்

Updated On :21 ஜூலை 2021, 11:01 am

கேரள மாநிலத்தில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வந்துள்ள சூழலில், கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கேரளத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 24, 25ஆம் தேதிகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். எவ்வித தளர்வுகளுமின்றி கடைபிடிக்கப்படும்.

மேலும், கரோனா பாதிப்பு சதவீதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள மாவட்டங்களில் வருகின்ற வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 3 லட்சம் பரிசோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.