குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

‘மூன்றாம் அலையை சமாளிக்க 85% மக்களுக்கு தடுப்பூசி போடவேண்டும்’: கேரள சுகாதார அமைச்சர்

கேரளத்தில் கரோனா மூன்றாம் அலையை தவிர்க்க குறைந்தது 85 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்
Updated On :28 ஜனவரி 2024, 3:32 am

ANI

கேரளத்தில் கரோனா மூன்றாம் அலையை தவிர்க்க குறைந்தது 85 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக குறைக்கப்பட்டு மூன்றாம் அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், கேரள மாநிலத்தில் இரண்டாம் அலையின் தாக்கம் குறையவில்லை.

இந்நிலையில், கேரளத்தில் கரோனா நிலை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கேரளத்தில் அதிகளவிலான கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது, அதனால் தான் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. கரோனாவால் உயிரிழப்போரின் தகவல்களை மருத்துவமனைகள் 24 மணிநேரத்தில் தெரிவிப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகின்றோம். கேரளத்தின் இறப்பு விகிதம் 0.4 சதவீதமாக உள்ளது.

மூன்றாம் அலையை சமாளிக்க குறைந்தது 85 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதிக மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முயற்சி செய்து வருகின்றோம். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. நாளொன்றுக்கு 2.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டமைப்பு உள்ளது. மத்திய அமைச்சகத்திடம் அதிக தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.