குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

‘தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 300 பெண்கள் துன்புறுத்தப்பட்டனர்’: சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

News image
சுவேந்து அதிகாரி
Updated On :28 ஜனவரி 2024, 3:32 am

ANI

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையில் 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரையின் போது தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து முக்கியமான தகவல்கள் இடம்பெறாததால் எதிர்க்கட்சியான பாஜக வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி பேசியதாவது,

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடைபெற்ற வன்முறை காட்டுமிராண்டித்தனமானது. இதில் பாஜக ஊழியர்கள் கொலை செய்யப்பட்டனர். 300க்கும் அதிகமான பெண்கள் துன்புறுத்தப்பட்டனர், அதில் சிலர் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகினர். இதுகுறித்த எந்த தகவல்களும் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. எனவே சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்முறை குறித்த விசாரணையை தன்னாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்பை வரவேற்கிறோம். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை வேறு மாநிலத்தில் பதிய வேண்டும். அப்போது தான் விசாரணை நேர்மையாக நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். 

இன்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டமானது, ஜூலை 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 7ஆம் தேதி 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.