/

கடத்தியவரை நன்றாக நடத்தினால் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

கடத்திய நபர், அடித்துத் துன்புறுத்தவில்லை, கொன்றுவிடுவேன் என்று மிரட்டவில்லை, கடத்தியவரை நன்றாக நடத்தியதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

News image

கடத்தியவரை நன்றாக நடத்தினால் ஆயுள் தண்டனை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

Updated On :1 ஜூலை 2021, 10:51 am


புது தில்லி: கடத்திய நபர், அடித்துத் துன்புறுத்தவில்லை, கொன்றுவிடுவேன் என்று மிரட்டவில்லை, கடத்தியவரை நன்றாக நடத்தியதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 364ஏ-வின் கீழ், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தெலங்கானா மாநிலத்தில் ஆட்டோ ஓட்டுநர், பள்ளிச் சிறுவனை கடத்தி வைத்துக் கொண்டு, அவனது பெற்றோரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஷோக் பூஷண் மற்றும் ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கடத்தல் வழக்கில், மூன்று அடிப்படை விஷயங்கள் நிரூபிக்கப்பட வேண்டும். அதில் ஒன்று ஒரு நபரை கடத்தி வைத்திருப்பது, கொலை செய்து விடுவதாக மிரட்டுவது அல்லது துன்புறுத்துவது, பணத்தைக் கேட்டு மிரட்டி கடத்தியவரை கொல்வது அல்லது காயப்படுத்துவது போன்றவையாகும். 

இந்த மூன்றும் நிரூபிக்கப்பட்டால்தான் ஒரு குற்றவாளிக்கு தூக்கு அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும், இந்த மூன்றில் ஒன்று நிரூபிக்கப்படாவிட்டாலும் 364 ஏ சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.