பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு

கர்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கர்நாடகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு

Updated On :30 ஜனவரி 2021, 7:41 am


கர்நாடகத்தில் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்ட 4 மருத்துவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், இரண்டு மருத்துவர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் நான்கு பேர் மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கரோனா மருத்துவமனையில் பணியாற்றும் மேலும் 3 மருத்துவர்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் லேசான அறிகுறிகளே தென்படுவதாகவும், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சாம்ராஜ்நகர் சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மட்டுமே, கரோனா வைரஸிலிருந்து காக்க உதவாது, இரண்டாவது டோஸ் மருந்தும் செலுத்திக் கொண்டால்தான், கரோனா தொற்றிலிருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது ஏன் என்று கேட்டதற்கு, இவர்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.