பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தெலங்கானாவில் முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் துப்புரவு பணியாளர்

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று காலை தொடங்கியது. தெலங்கானாவில் துப்புரவுப் பணியாளரான 42 வயது கிஸ்தம்மா, முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

News image

தெலங்கானாவில் முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் துப்புரவு பணியாளர்

Updated On :16 ஜனவரி 2021, 7:23 am


நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று காலை தொடங்கியது. தெலங்கானாவில் துப்புரவுப் பணியாளரான 42 வயது கிஸ்தம்மா, முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

செகுந்தராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் இன்று காலை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட கிஸ்தம்மா கூறுகையில், தற்போது நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு சிறிது நேரம் அமர்ந்திருக்கச் சொன்னார்கள். அவ்வளவுதான். அனைவருமே எந்த அச்சமும் இல்லாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்த கேட்டதற்கு, யாரும் என்னை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறவில்லை. எனக்கு எந்த பயமும் இல்லை, இந்த மருத்துவமனையின் சங்கத் தலைவர் நான். அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சுமார் 14 ஆண்டுகளாக காந்தி மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் கிஸ்தம்மா, அந்த மருத்துவமனை முழுவதும் கரோனா சிறப்பு மையமாக மாறிய முழுக் காலமும் கிஸ்தம்மா அங்கு துப்புரவுப் பணியை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.