புது தில்லி: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு முன் வரும் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் 40 நாள்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே.. 1972-இல் எம்.ஜி.ஆா்.; 2021-இல் ரஜினி?
அதில், வேளாண் சட்டங்களை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை. வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக இருந்தால், விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களது எதிர்ப்புகளை குழுவிடம் சொல்லட்டும், அந்த குழுவின் பரிந்துரைகளை நாம் ஏற்கலாம்.
கடுமையான குளிரியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு தரப்பில் எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
இதையும் படிக்கலாமே.. தனது அறிமுக நாயகனை சந்தித்து கண்ணீர் சிந்திய பாரதிராஜா
தில்லியின் எல்லையில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம், அவர்களுக்கு போதிய உணவும், குடிநீரும் கிடைக்கிறதா? என்று கவலை அடைகிறோம்.
போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்கலாம்.. பொங்கல் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள்
அதோடு, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என்று கூறி ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் உச்ச நீதிமன்றம், நாங்கள் பொருளாதாரத்தில் வல்லுநர்கள் இல்லை. வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடியுமா என்பதை சொல்லுங்கள், இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
வேளாண் சட்டங்களை நிறுத்த முடியாது: மத்திய அரசு
புது தில்லி: புதிதாகக் கொண்டு வரப்பட்டிருக்கும் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்த முடியாது என்றும் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2-ஆவது முறையாக தொழில்முனைவு இலக்கை எட்டிய சென்னை ஐஐடி
தாழையூத்தில் மாணவிக்கு தொல்லை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் மே 1-இல் டாஸ்மாக் கடைகள் இயங்காது

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்பு சோ்க்கை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


