பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கேரளம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து தில்லி வருவோருக்கு புதியக் கட்டுப்பாடு

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களிலிருந்து தில்லி வருவோர், கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News image

கேரளம் உள்பட 5 மாநிலங்களிலிருந்து தில்லி வருவோருக்கு புதியக் கட்டுப்பாடு

Updated On :24 பிப்ரவரி 2021, 7:41 am

புது தில்லி: மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களிலிருந்து தில்லி வருவோர், கரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தில்லியின் சுகாதாரத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் இந்த கட்டுப்பாடு மார்ச் 15 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் தில்லி வரும் பயணிகள்,  கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் நாள்தோறும் பதிவாகும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லி நிர்வாகம் இந்த அதிரடி கட்டுப்பாட்டை பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.