பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

எந்தத் தடுப்பூசி வேண்டும்? தமிழகத்தில் இனி பயனாளர்களே முடிவு செய்யலாம்

தமிழகத்தில் இனி, பயனாளர்களே தங்களுக்கு எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News image

எந்தத் தடுப்பூசி வேண்டும்? தமிழகத்தில் இனி பயனாளர்களே முடிவு செய்யலாம்

Updated On :18 பிப்ரவரி 2021, 7:33 am


மதுரை: கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாத காலம் பூர்த்தியடையும் நிலையிர், தமிழகத்தில் இனி, பயனாளர்களே தங்களுக்கு எந்தத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை தலைமைச் செயலாளர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறுகையில், நாட்டில் கோவக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்குமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மருந்துகளுமே அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கோவாக்சின் மருந்து இருப்பு வைக்கப்படாமல் இருந்தது. யாரேனும் கோவிஷீல்டுக்கு பதிலாக கோவாக்சின் செலுத்திக் கொள்ள விரும்பினால், அவர்கள் வேறு மாவட்டங்களுக்குச் சென்று போட்டுக் கொள்ளும் நிலைமை இருந்தது.

ஆனால் தற்போது முதல் முறையாக பயனாளர்கள் கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு என எந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்பதை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த வாரம் வரை தமிழகத்தில் வெறும் 6 கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் மட்டுமே கோவாக்சின் செலுத்தப்பட்டது. ஆனால் தற்போது பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் இரண்டு மருந்துகளும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.