பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி வழங்கப்பட்ட கொடூரம்

12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கைகளை சுத்தப்படுத்த பயன்படும் கிருமிநாசினி வழங்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News image

மகாராஷ்டிரம்: 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமிநாசினி வழங்கப்பட்ட கொடூரம்

Updated On :2 பிப்ரவரி 2021, 2:36 am


யவத்மால்: மருத்துவத்துறையின் கவனக் குறைவு காரணமாக, மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக கைகளை சுத்தப்படுத்த பயன்படும் கிருமிநாசினி வழங்கப்பட்ட கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

5 வயதுக்கு உள்பட்ட 12 குழந்தைகளும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, ஆஷா - சுகாதாரத் துறைப் பணியாளர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, பன்போரா ஆரம்ப சுகாதார நிலையத்தில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முன்பு, கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கிருமிநாசினி திரவத்தை, தவறுதலாக, 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக அளித்துள்ளனர்.

இது குறித்து யவத்மால் மாவட்ட அதிகாரி பஞ்சால் கூறுகையில், சொட்டு மருந்து வழங்க 15 நாள்களுக்கு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. ஆனால், அதை அவர்கள் பின்பற்றாமல், தங்களது கைகளை சுத்தப்படுத்த கொடுத்த திரவத்தை குழந்தைகளுக்கு அளித்துள்ளனர்.  இதுபோன்ற கவனக்குறைவான செயல்களை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.