டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

ஸ்மார்ட்ஃபோன் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய தேநீர் வியாபாரி

ஒரு தேநீர் வியாபாரி, தனது 5 வயது மகளின் கல்விக்காக ஸ்மார்ட்ஃபான் ஒன்றை வாங்கியுள்ளார்.

News image

ஸ்மார்ட்ஃபோன் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய தேநீர் வியாபாரி

Updated On :22 டிசம்பர் 2021, 8:12 am


ஷிவ்புரி: ஒரு தேநீர் வியாபாரி, தனது 5 வயது மகளின் கல்விக்காக ஸ்மார்ட்ஃபான் ஒன்றை வாங்கியுள்ளார். இது செய்தியல்ல. அந்த ஸ்மார்ட்ஃபோனை வாங்கியதை அவர் கொண்டாடிய விதம்தான் இன்று சமூக வலைத்தளங்களில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த தேநீர் வியாபாரி, ரூ.12,500 கொடுத்து ஒரு ஸ்மார்ட்ஃபோனை வாங்கியுள்ளார். நாட்டில் பல கோடி பேர் ஸ்மார்ட்ஃபோன் வைத்திருந்தாலும், இவர் வாங்கிய முதல் ஸ்மார்ட்ஃபோன் இதுதான்.

எனவே, அதைக் கொண்டாடாமல் இருக்க முடியுமா என்ன? ஸ்மார்ட்ஃபோன் வாங்கி, அதை, தனது மகளின் கையில் கொடுத்து, ஒரு குதிரை வண்டியில் மகளை அமரவைத்து, அலங்கரித்து, வீட்டுக்கு கொண்டு நடனமாடி, பேண்ட் வாத்தியங்கள் இசைக்க, தேநீர் வியாபாரி கொண்டு வந்த விடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இது பற்றி தேநீர் வியாபாரி முராரி குஷ்வாஹா கூறுகையில், எனது மகள் அடிக்கடி ஸ்மார்ட்ஃபோன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவரிடம் சொல்லும்போதெல்லாம் விரைவில் வாங்கித் தருகிறேன், நாம் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை இந்த ஊரே பார்க்கும் என்று ஜம்பமாகக் கூறுவேன். உண்மையிலேயே நான் ஸ்மார்ட்ஃபோன் வாங்கும் போது அதை செயல்படுத்த திட்டமிட்டு, இவ்வாறு குதிரை வண்டி, பேண்டு வாத்தியம் இசைக்கக் கொண்டு வந்து, ஊரையே பார்க்க வைத்துவிட்டேன் என்கிறார் சிரித்தபடி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.