/

சென்னை உள்பட ஏழு புல்லட் வழித்தடங்களுக்கு திட்டமிடும் ரயில்வே

நாடு முழுவதும் சுமார் 7 புல்லட் வழித்தடங்களை உருவாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 டிசம்பர் 2021, 8:12 am


புது தில்லி: ஏற்கனவே திட்டமிடப்பட்ட மும்பை - அகமதாபாத் இடையேயான அதிகவிரைவு புல்லட் விரைவு ரயில் திட்டம் இன்னும் நிறைவடையாத நிலையில், நாடு முழுவதும் சுமார் 7 புல்லட் வழித்தடங்களை உருவாக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாராணசிக்கும் இதில் இடம் உண்டு. அதன்படி, புது தில்லி - வாராணசிக்கு இடையே ஒரு புல்லட் ரயில் திட்டம் வரவிருக்கிறது.

எப்படி, சீனா, தனது முக்கிய நகரங்கள் பலவற்றையும் புல்லட் ரயில் திட்டத்தின் மூலம் இணைத்துள்ளதோ, அதுபோல, நம் நாட்டிலும், மிகப்பெரிய நகரங்களை புல்லட் ரயில்களைக் கொண்டு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மூத்த ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

மும்பை - அகமதாபாத் இடையே தற்போது நடைபெற்று வரும் புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்பட்டதும் மும்பையிலிருந்து, மிகப்பெரிய தொழில் நகரமான நாக்பூருக்கு செல்வது மிகவும் எளிதாகும். ஏற்கனவே இது தொடர்பான நீண்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வறிக்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, புதிதாக அமையவிருக்கும் புல்லட் ரயில் வழித்தடங்களின் விவரம்
1. தில்லி - வாராணசி (அயோத்தியா உள்பட) 
2. மும்பை - நாக்பூர் (740 கி.மீ.)
3. தில்லி - அகமதாபாத் (886 கி.மீ.)
4. தில்லி - அமிருதசரஸ் (459 கி.மீ.)
5. மும்பை - ஹைதராபாத் (711 கி.மீ.)
6. சென்னை - மைசூரு (435  கி.மீ.)
7. வாராணசி - ஹௌரா (760 கி.மீ.)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.