மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

கங்கை விரைவுப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமா் மோடி

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவுப் பாதைக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார் பிரதமா் நரேந்திர மோடி. 

News image

கங்கை விரைவுப்பாதைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமா் மோடி

Updated On :18 டிசம்பர் 2021, 9:16 am

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் 594 கி.மீ. தொலைவு கொண்ட கங்கை விரைவுப் பாதைக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார் பிரதமா் நரேந்திர மோடி. 

இந்தப் பாதையானது, மீரட்டின் பிஜௌலி கிராமத்திலிருந்து பிரயாக்ராஜின் ஜூடப்பூர் தண்டு கிராமம் வரை அமைக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் அதிவேக போக்குவரத்துத் தொடா்பை வழங்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையுடன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. 594 கி.மீ. நீளமுள்ள சாலை ஆறு வழி விரைவுப்பாதையாக ரூ.36,200 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கின்ற மீரட் முதல் பிரயாகை வரையிலான விரைவுப் பாதை மாநிலத்தின் 12 மாவட்டங்கள் வழியாக செல்லும். மாநிலத்தின் மிக நீண்ட விரைவுப்பாதையாக இது இருக்கும்.

ஷாஜஹான்பூா் விரைவுப் பாதையில் அவசரமாக விமானம் புறப்படவும், விமானப்படை விமானங்கள் தரையிறங்கவும் 3.5 கி.மீ. நீள ஓடுபாதை அமைக்கப்படவுள்ளது. இந்த விரைவுப்பாதை அமைக்கப்படுவதோடு தொழில்துறை வழித்தடத்துக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விரைவுப்பாதையால், தொழில்துறை, வா்த்தகம், வேளாண்மை, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் மேம்பாடு அடையும். இந்தப் பிராந்தியத்தின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு இது பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.