தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பெண்ணை சாலையில் 100 மீட்டர் இழுத்துச் சென்ற செல்போன் கொள்ளையர்கள்

புது தில்லியில், டிசம்பர் 16ஆம் தேதி மாலை, செல்லிடப்பேசியை பறிக்க முயற்சித்தபோது, பெண்ணை, சாலையில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

News image
பெண்ணை சாலையில் 100 மீட்டர் இழுத்துச் சென்ற செல்போன் கொள்ளையர்கள்
Updated On :28 ஜனவரி 2024, 5:43 am

IANS


புது தில்லி: புது தில்லியில், டிசம்பர் 16ஆம் தேதி மாலை, செல்லிடப்பேசியை பறிக்க முயற்சித்தபோது, பெண்ணை, சாலையில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

புது தில்லியில், நிர்பயா சம்பவத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான அதே நாளில், இதுபோன்றதொரு சம்பவம் தில்லியில் பதிவாகியுள்ளது.

ஷாலிமர் பாக் பகுதியில், வியாழக்கிழமை மாலை, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு சென்ற 23 வயது பெண்ணிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்கள், செல்போனை பறிக்க முயன்றனர்.

அப்போது, அப்பெண், கொள்ளையர்களில் ஒருவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு விடாததால், இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்கள், அப்பெண்ணை சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், அங்கிருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர் என்பது தெரிய வந்தது. காயமடைந்த அவர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களில் ஒருவரைப் பிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.