பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெண்ணை சாலையில் 100 மீட்டர் இழுத்துச் சென்ற செல்போன் கொள்ளையர்கள்

புது தில்லியில், டிசம்பர் 16ஆம் தேதி மாலை, செல்லிடப்பேசியை பறிக்க முயற்சித்தபோது, பெண்ணை, சாலையில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

News image

பெண்ணை சாலையில் 100 மீட்டர் இழுத்துச் சென்ற செல்போன் கொள்ளையர்கள்

Updated On :17 டிசம்பர் 2021, 11:38 am


புது தில்லி: புது தில்லியில், டிசம்பர் 16ஆம் தேதி மாலை, செல்லிடப்பேசியை பறிக்க முயற்சித்தபோது, பெண்ணை, சாலையில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

புது தில்லியில், நிர்பயா சம்பவத்தின் மூலம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியான அதே நாளில், இதுபோன்றதொரு சம்பவம் தில்லியில் பதிவாகியுள்ளது.

ஷாலிமர் பாக் பகுதியில், வியாழக்கிழமை மாலை, செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டு சென்ற 23 வயது பெண்ணிடமிருந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்கள், செல்போனை பறிக்க முயன்றனர்.

அப்போது, அப்பெண், கொள்ளையர்களில் ஒருவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு விடாததால், இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்கள், அப்பெண்ணை சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண், அங்கிருக்கும் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர் என்பது தெரிய வந்தது. காயமடைந்த அவர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களில் ஒருவரைப் பிடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.