டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

அசாமில் ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பலி

அசாமில் ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பலியானதாக வடகிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

விபத்துக்குள்ளான யானை

Updated On :1 டிசம்பர் 2021, 9:23 am

அசாமில் ரயில் மோதியதில் இரண்டு யானைகள் பலியானதாக வடகிழக்கு ரயில்வே மூத்த அதிகாரி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே அதிகாரி கூறுகையில்,

மோரிகான் மாவட்டத்தின் ஜாகிரோடு அருகே திப்ருகார் நோக்கி சென்ற ராஜ்தானி விரைவு ரயில் நேற்று இரவு 10 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் இன்ஜின் பகுதி மோதியதில் இரண்டு யானைகள் பலியானது.

மேலும், இந்த சம்பத்தால் ரயில் போக்குவரத்து ஏதும் பாதிக்கப்படவில்லை என்றார்.

விபத்து குறித்து ரயில் ஓட்டுநரின் முதல்கட்ட அறிக்கையின்படி, “ரயிலின் இன்ஜின் பகுதி மோதியதில் இரண்டு யானைகள் விபத்துக்குள்ளானது. அதில் ஒரு யானை சம்பவ இடத்திலேயே பலியானது, மற்றொன்று பலத்த காயமடைந்திருந்தது. பின்னர் இரண்டு யானைகளும் உயிரிழந்தது தெரியவந்தது.”

Story image

வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள வனப்பகுதிகளுக்கு நடுவே செல்லும் ரயில்களால் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.