பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

‘அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க ராகுல் முயற்சிக்கிறார்’: மல்லிகார்ஜுன கார்கே

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க ராகுல் காந்தி முயற்சித்து வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஆகஸ்ட் 2021, 5:41 am

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க ராகுல் காந்தி முயற்சித்து வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19ல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த தொடர் தொடங்கிய நாள் முதலே, பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற அவையை எதிர்க்கட்சிகள் அவமதிப்பதாக பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியது:

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபடுவதாக சொல்கிறீர்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சியின் போது இரண்டு முறை நாடாளுமன்ற தொடரை முடக்கிய உங்கள் தலைவர்கள், ஜனநாயகத்தை காப்பதற்காக செய்தோம் என்று கூறினார்கள்.

மேலும், ஏழை மக்களின் பிரச்னைகளில் ராகுல் காந்தி உறுதியாகவுள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிக்கிறார். சுதந்திரம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் நலன் கருதி மாநில அரசியலை மறந்து ஒன்றிணைய கேட்டுக் கொண்டுள்ளார். பெகாஸஸ் மற்றும் பிற பிரச்னைகளை விவாதிக்க நாங்கள் விரும்புகிறோம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.