பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கர்நாடகத்தில் 29 அமைச்சர்கள் பதவியேற்பு: துணை முதல்வர் இல்லை

கர்நாடகத்தில் புதிய அமைச்சரவையில் 29 பேர் பதவியேற்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார்.

News image

பசவராஜ் பொம்மை

Updated On :4 ஆகஸ்ட் 2021, 6:40 am

கர்நாடகத்தில் புதிய அமைச்சரவையில் 29 பேர் பதவியேற்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை புதன்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் பசவராஜ் கூறியதாவது, “இன்று பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்கவுள்ள 29 எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாஜக தலைமையிடம், இம்முறை துணை முதல்வர் தேவையில்லை எனக் கூறியுள்ளது.

புதிய அமைச்சர்களாக ஓபிசி சமூகத்தில் 7, எஸ்சி சமூகத்தில் 3, எஸ்டி சமூகத்தில் ஒருவர், லிங்காயத்து சமூகத்தில் 8, ரெட்டி சமூகத்தில்  ஒருவர், ஒக்கலிகர் சமூகத்தில் 7 மற்றும் ஒரு பெண்ணிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

கா்நாடகத்தில் புதிய முதல்வராக கடந்த ஜூலை 28ஆம் தேதி பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை, அமைச்சரவைக்கான பட்டியல் தயாரிப்பது தொடா்பாக தில்லியில் மேலிடத் தலைவா்களுடன் கடந்த இரு தினங்களாக பேச்சுவாா்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.