பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ம.பி.யில் ஏற்பட்ட வெள்ளத்தால் 240 கிராமங்கள் பாதிப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 240 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

வெள்ளத்தில் சிக்கிய கிராம மக்களை மீட்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர்

Updated On :4 ஆகஸ்ட் 2021, 6:58 am

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 240 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த சில நாள்களாக மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வந்த நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில், பேரிடர் மீட்புக் குழுக்கள், ராணுவம் மற்றும் விமானப்படை ஈடுபட்டு வருகிறது. 

இதுகுறித்து முதல்வர் சிவராஜ் பேசியது:

வடக்கு மத்தியப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு மோசமாக உள்ளது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் 240 கிராமங்களிலிருந்து 5,950 பேரை மீட்டுள்ளனர். மேலும் 1,950 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

மழை குறைந்து வருவதால், சாலைகளில் தேங்கிய வெள்ளநீரும் குறைகிறது. இந்த வெள்ள பாதிப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமருடன் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.