பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்

நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image

மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு

Updated On :3 ஆகஸ்ட் 2021, 10:58 am

நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, நேற்று மாலை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, பிரஹலாத் ஜோஷி, பியூஸ் கோயல் உள்ளிட்டோருடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

அதேபோல், இன்று காலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, நாடாளுமன்றத்தில் ஏற்பட்டு வரும் அமளியை முடிவுக்கு கொண்டுவந்து மீதமுள்ள நாள்களில் அவைகளை சுமூகமாக நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.