பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

உ.பி. துணை முதல்வருக்கு கரோனா: மருத்துவமனையில் அனுமதி

உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சஞ்சய்காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

News image

உ.பி.துணை முதல்வருக்கு கரோனா: மருத்துவமனையில் அனுமதி

Updated On :28 ஏப்ரல் 2021, 6:18 am

உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தினேஷ் சர்மா கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சஞ்சய்காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

செவ்வாய்க்கிழமை மாலை துணை முதல்வர் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அவரது மனைவிக்கும் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் உள்ளார். 

இதுதொடர்பாக துணை முதல்வர் சுட்டுரை பதிவில், 

கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று பரிசோதனை செய்தேன். தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருந்தேன். மேல் சிகிச்சைக்காக, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார். 

துணை முதல்வர் சர்மா மற்றும் அவரது மனைவி இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.