பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ராஜஸ்தானில் மதுபானக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபானக் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 

News image

ராஜஸ்தானில் மதுபானக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு

Updated On :24 ஏப்ரல் 2021, 11:51 am

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மதுபானக் கடைகள் திறக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திங்கள்கிழமை முதல் வெள்ளி வரை காலை 6 மணி முதல் காலை 11 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும். ஆனால் வார இறுதி நாள்களில் மதுபானக் கடைகள் செயல்படாது என்று ராஜஸ்தான் அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மளிகை, காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய விற்பனையைப் போலவே மதுபானக் கடைகளுக்கும் நேரக் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு மாநில அரசு கடுமையான வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. மதுபானக் கடைகள், மற்றும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் தொடர்பான உத்தரவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.