பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

ஒரு வாரத்தில் 1 லட்சம் பாதிப்பு; கேரளத்தில் தொடங்கியது 2 நாள் ஊரடங்கு

கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவித்துள்ளது. 

News image

ஒரு வாரத்தில் 1 லட்சம் பாதிப்பு; கேரளத்தில் 2 நாள் ஊரடங்கு தொடங்கியது

Updated On :24 ஏப்ரல் 2021, 10:09 am

கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவித்துள்ளது. 

கேரளத்தில் கடந்த சில நாள்களாக கரோனா கோரத்தாண்டவம் எடுத்துள்ளது. நாளுக்குநாள் பாதிப்பும், பலியும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இரவு ஊரடங்கு மட்டுமின்றி, 2 நாள் வார பொது முடக்கமும் தற்போது அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, இன்று முதல் கேரளத்தில் ஊரடங்கு தொடங்கியுள்ளது. மக்கள் சரியான காரணம் இல்லாமல் தெருக்களில் வெளியில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கைத் தொடர்ந்து, அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டது. 

அதேபோல் அத்தியாவசியப் பொருள்களுக்கு மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் தனியார் வாகனங்கள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 1,30,617 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், 28,447 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் இதுவரை ​​1,78,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைத் தொட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.