2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

வங்கதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. 

News image
வங்கதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு
Updated On :27 ஜனவரி 2024, 8:02 pm

IANS

கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. 

வங்க தேசத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வியாழக்கிழமை முதல் மீண்டும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்று தலைமை தகவல் அதிகாரி சுரோத் குமார் தெரிவித்தார். 

கரோனா பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் 9 நாள்களுக்கு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வங்கதேசம் முழுவதும் போக்குவரத்து ஆகியவற்றை ரத்து செய்தது. 

நிலைமை மோசமடைந்ததால் மேலும் ஊரடங்கு புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,462 பேருக்குத் தொற்றும், 102 இறப்பும் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 7,81,950 பேர் பாதிப்பும், 10,385 பலியும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.