பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

இமாசலில் உண்டு - உறைவிடப் பள்ளியில் 49 பேருக்கு கரோனா

இமாசல பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் உண்டு - உறைவிடப் பள்ளியில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 49 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

இமாசலில் உண்டு - உறைவிடப் பள்ளியில் 49 பேருக்கு கரோனா

Updated On :19 ஏப்ரல் 2021, 7:19 am

இமாசல பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகரித்த நிலையில் உண்டு - உறைவிடப் பள்ளியில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட 49 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சோலன் மாவட்டத்தில் தரம்பூர் நகரத்திற்கு அருகில் பைன் கிரோவ் பள்ளியில் 49 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் அப்பள்ளியில் இதுவரை 150 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக துணை ஆணையர் கே.சி.சாமன் கூறுகையில், 

தரம்பூர் மற்றும் சுபாத்து ஆகிய இடங்களில் உள்ள பைன்கிரோவ் பள்ளியில் நிலைமை ஆபத்தாக உள்ளதையடுத்து, இரு பள்ளிகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

முன்னதாக, சம்பா மாவட்டத்தின் உறைவிடப் பள்ளியான டல்ஹெளசி பப்ளிக் பள்ளியில் 122 பேருக்குத் தொற்று பதிவாகியது.  அவற்றில் 99 மாணவர்கள் மற்றும் 23 ஊழியர்கள் ஆவார். 

கடந்த மாதம் ஏப்ரல் 21 வரை மாநில பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டாலும், உறைவிடப் பள்ளிகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன.

சோலனைத் தவிர, காங்க்ரா, உனா மற்றும் சிர்மோர் போன்ற பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று அதிகரிப்பது கவலையளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.