அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

தாணேவில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு: 18 பேர் பலி

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 

News image

தாணேவில் 5 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

Updated On :9 ஏப்ரல் 2021, 6:04 am

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 

இதுதொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 

தாணேவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,167 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 3,61,434 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 18 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி 6,638 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உள்ளது. 

இதுவரை, 3,06,079 பேர் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் மீட்பு விகிதம்  84.68 சதவீதமாக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 48,171 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.