மும்பை: சரியாகச் சொல்வதென்றால் ஒரு ஆறு மாதம்தான் ஆகியிருக்கும், ஊரடங்கால் ஊருக்குச் சென்றுவிட்டு, திரும்ப மும்பைக்கு வந்து, அதற்குள் மீண்டும் தங்களது மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தயாராகி வருகிறார்கள் புலம்பெயர்ந்தோர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட போது, தங்களது வாழ்வாதாரங்கள் எல்லாம் முடங்கிப் போனதால் மும்பையை விட்டு, மகாராஷ்டிரத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களை நோக்கிச் சென்ற மக்கள், மீண்டும் இயல்பு நிலைத் திரும்பியதால், ஆறு மாதங்களுக்கு முன்புதான் மும்பை மற்றும் மும்பை மாநகராட்சிக்குத் திரும்பினர்.
இதையும் படிக்கலாமே.. தமிழகப் பேரவைத் தேர்தலில் 72.78% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு
மீண்டும் தங்களது வாழ்வாதாரங்களை புதுப்பித்துக் கொண்டு ஓரளவுக்கு பொருளாதார நிலையில் மீண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டுக் கொண்டிருந்த நேரத்தில்தான் பேரிடியாக இரண்டாவது அலைத் தாக்கத் தொடங்கியிருக்கிறது.
மகாராஷ்டிரத்தில் அதிகளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருவதால், இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என்று தொடர்ந்து அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
இதனால், இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், மகாராஷ்டிரத்திலிருந்தும் வந்து மும்பையில் வேலை செய்து வரும் புலம்பெயர்ந்தோர் கடும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். எனவெ. பொதுமுடக்கம் அறிவித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் தங்களது உடைமைகளை கட்டித் தயாராக வைத்திருக்கிறார்கள் எண்ணற்ற புலம்பெயர்ந்தோர்.
பொதுமுடக்கத்துக்குப் பின், 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், உத்தரப்பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகம், குஜராத், தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து திரும்பி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகள், பண்ணைகள், உணவகங்கள், அலுவலகம், வணிக வளாகம் என பல இடங்களில் லட்சக்கணக்கான பணிகளை நிரப்பினர்.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் மிகக் குறைவான வாக்குகள் பதிவான 5 தொகுதிகள்
ஆனால், மீண்டும் மகாராஷ்டிரத்தில் இரண்டாவது அலை அடிக்கத் தொடங்கியிருப்பதால், தங்களது மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக் கொண்டு, மீண்டும் பிறப்பிடம் தேடி ஓட மனதளவில் தயாராகி வருகிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


