புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ம.பி.யில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 118 வயதுள்ள மூதாட்டி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். 

News image

ம.பி.யில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 118 வயது மூதாட்டி

Updated On :5 ஏப்ரல் 2021, 7:43 am

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் 118 வயதுள்ள மூதாட்டி முதல் கரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். 

இதுதொடர்பாக மாவட்ட நீதிபதி தீபக் சிங் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

சாகர் மாவட்டத்தில் சதர்பூர் கிராமத்தில் வசிக்கும் 118 வயது பெண் துல்சபாய் இன்று தனது முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளார். இதையடுத்து நாட்டில் மிகவும் வயதுள்ள மூதாட்டி முதல்முறையாக தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், 

நான் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டேன். என்னைப்போன்று  அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும். இதனால் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. 

மூதாட்டி 1903 ஜனவரி 1-இல் பிறந்துள்ளார். ஆதார் அட்டையின்படி சதர்பூர் கிராமத்தில் வசிப்பர் என்றும் மருத்துவர் பூபேந்திர குர்மி தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருவதால், கரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் கமல்நாத் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.