மற்றவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ள முன்வரவில்லை மற்றும் சிலர் பரிசோதனைக்கு பயந்து கிராமத்தில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், சுமார் 19 பேரிடம் மாதிரிகளை பெற்றுக் கொண்டு வந்ததாகக் கூறி ஆய்வுக் கூடத்தில் கொடுத்துள்ளனர். அந்த 19 பேரில் 17 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.அந்த கிராமத்தில் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகளை கொடுத்த நான்கு பேரில் இரண்டு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதே வேளை பரிசோதனையே செய்து கொள்ளாத அந்த கிராமத்தைச் சேர்ந்த மேலும் 15 பேருக்கு கரோனா இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.