ஓமனில் இந்தியக் கலைஞர் தற்கொலை
இந்தியாவைச் சேர்ந்த கலைஞர் மஸ்கட்டில் தற்கொலை செய்துகொண்டதாக ராயல் ஓமன் காவல்துறையினர் தெரிவித்தனர்.


இந்தியாவைச் சேர்ந்த கலைஞர் ஓமனின் மஸ்கட்டில் தற்கொலை செய்துகொண்டதாக ராயல் ஓமன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிராஃபிக் டிசைனரும் சைன்போர்டு கலைஞருமான 50 வயதான உஜ்ஜி கிருஷ்ணன் சனிக்கிழமை தனது குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ரூவியில் உள்ள ஹோண்டா சாலையில் அவரது குடியிருப்பில் சனிக்கிழமை மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக ருவி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்கொலைக்கான காரணத்தை மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றன.
மேலும், கிடைத்த தகவலில் இந்த சம்பத்தன்று அவரது நண்பருக்குப் பல முறை தொலைபேசி மூலம் அழைத்துள்ளார். ஆனால் அவர் அழைப்பிற்கு அவர் பதிலளிக்கவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணன் ஓமனில் உள்ள இந்திய கலாசார சமூகத்தின் உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...