பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பெங்களூருவில் முதல் முறை: தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கரோனா

பெங்களூருவில் முதல் முறையாக தொற்றில் இருந்து மீண்ட நபருக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

பெங்களூருவில் முதல் முறை: தொற்றில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் கரோனா

Updated On :7 செப்டம்பர் 2020, 9:59 am


பெங்களூரு: பெங்களூருவில் முதல் முறையாக தொற்றில் இருந்து மீண்ட நபருக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து ஒரு மாதத்துக்கு முன்பு வீடு திரும்பிய 27 வயது பெண்ணுக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பெண்ணுக்கு மீண்டும் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறித்து விரிவான தகவல்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவருக்கு தொற்று கல்சுரல் பரிசோதனை அல்லது சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும், இதை உறுதி செய்வதற்கு முன்பு, தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்கிறார்கள்.

கடந்த ஜூலை 6-ம் தேதி அப்பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. வேறு எந்த உடல் நலப் பிரச்னையும் இல்லாத நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஜூலை 24-ல் வீடு திரும்பினார்.

சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் அவருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. அப்போது அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து கர்நாடகா மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினர் மருத்துவர் கிரிதர் பாபு கூறுகையில், இது மிகவும் அரிதிலும் அரிதான நிகழ்வு. கரோனா பரிசோதனையை மீண்டும் செய்துதான் அப்பெண்ணுக்கு கரோனா தொற்று மீண்டும் பாதித்ததா என்பதை உறுதி செய்ய முடியும். இதில் நிச்சயம் ஆய்வு முக்கியம் என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.