அனந்த்புர்: ஆந்திர மாநிலம் ஆனந்த்புர் மாவட்டத்தில், 102 வயது மூதாட்டி ஒருவர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையிலும், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
பெட்டா கம்மவரிபள்ளே அருகே புட்டபர்த்தி மண்டலத்தில் வசித்து வருபவர் முன்னநேனி சுப்பம்மா (102). இவருக்கு 5 மகன்கள், 3 மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், ஒரு மகன் வீட்டில் இவர் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆகஸ்ட் 21-ம் தேதியன்று, சுப்பம்மா உள்பட அவரது வீட்டில் இருந்த ஐந்து பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில், சுப்பம்மாவின் 62 வயது மகனுக்கு நீரிழிவு நோய் இருந்ததால் அவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சுப்பம்மா உள்பட நான்கு பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
கரோனாவில் இருந்து மீண்ட 102 வயது சுப்பம்மாவைப் பற்றி கேள்விப் பட்ட அக்கம் பக்கத்தினரும், உறவினர்களும் நாள்தோறும் அவரை வந்து பார்த்து நலம் விசாரித்து, கரோனாவில் இருந்து மீண்டதற்கு வாழ்த்துகளையும் தெரிவித்துச் செல்கிறார்கள்.
சரி, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு கரோனாவில் இருந்து மீண்ட 102 வயது பாட்டியின் உணவு ரகசியம் என்னவாக இருக்கும் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?
அவரே சொல்கிறார்..சுகாதாரத் துறையினர் அறிவுறுத்திய மருந்துகளை நேரம் தவறாமல் சரியான நேரத்தில் சாப்பிட்டேன்.
ராகி களியை உணவில் சேர்த்துக் கொண்டேன்.
அவ்வப்போது எலுமிச்சை சாறு அருந்தினேன்.
கோழிக்கறியும், இதர அசைவ உணவுகளையும் சாப்பிட்டேன் என்கிறார் உற்சாகம் சற்றும் குறையாத சுப்பம்மா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: மத்திய அரசு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜூன் 19-க்கு ஒத்திவைப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

எல்ஆா்ஜி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு 2 அடுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


